×

மாடியில் இருந்து தவறி விழுந்து என்எல்சி ஊழியர் சாவு

உளுந்தூர்பேட்டை, ஏப். 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அஜிஸ் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (57). என்எல்சி ஊழியர். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நெய்வேலியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்காக குடும்பத்தோடு ஜனார்த்தனன் அஜிஸ் நகருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவர், நேற்று அதிகாலை மாடியில் இருந்து இறங்கி வரும்போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மாடியில் இருந்து தவறி விழுந்து என்எல்சி ஊழியர் சாவு appeared first on Dinakaran.

Tags : NLC ,Ulundurpet ,Janarthanan ,Aziz Nagar ,Kallakurichi district ,Bhavani ,Neyveli ,Dinakaran ,
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...